Wednesday, March 5, 2008

இந்திய தேசியம் பார்ப்பன தேசியமே

இந்திய தேசியம்,இந்திய தேசிய ஒருமைபாடு .பாரத தேசம் என்ற கூச்சல்கல் இடைவிடாது நமது செவிகளை தாக்கும் வண்ணம் எழுப்பப்பட்டு வருகின்றன பல்தேசிய அரசு சமூகமான இந்தியாவை ஒரு தேசிய சமூகமாக ஒரு பழமை வாய்ந்த தேசமாக காட்டும் முயற்சியில் 3500 ஆண்டுகலுக்கு முன் சிந்துவெளியில் வந்து குடியேறிய ஆரிய இனக்குழு தலைவன் ஒருவன் பெயரால் பாரத தேசம் என்று பெயரிட்டு அரசியல் சட்டத்திலும் பொறித்து கொண்டிருக்கிறார்கள் .ஆனால் இந்தியா ஒரு தேசிய சமூகம் அல்ல என்பது மட்டுமின்றி அது ஒரு அரசு சமூகமாக கூட இன்றைய எல்லைகலுடன் 1947 க்கு முன் இருந்தது இல்லை என்பதுதான் வரலாற்று உண்மையாகும் வெள்ளயர் காலனிய ஆதிக்கத்துக்கு முன் இந்தியாவில் இருந்த மிகப் பெரிய பேரசுகள் அசோக பேரரசு.துக்ளக் பேரரசு. ஒவ்ரங்கசிப் பேரரசு ஆகியவையே.இப்பேரரசுகள் கூட இந்தியாவின் இன்றைய பகுதிகல் அணைது பகுதிகலையும் கொண்டிருக்கவில்லை.அசாம் மற்றும் வட கிழக்கு பிரதேசங்கலும் தென்னிந்தியாவின் சில பகுதிகலும் இப்பேரரசுகலுக்கு உட்பட்டிருக்கவில்லை.இந்திய வரலாற்றில் இப்பேரரசுகளின் காலமும் குருகியதே.மற்ற பேரரசுகள் வ்ட இந்தியாவின் சில பகுதிகலிலோ,தென்னிந்தியாவின் சில பகுதிகலிலோ மட்டுமே இருந்தன.ஆங்கிலேயர் ஆட்சியில் பங்களாதேஸ்,நேபாளம், பூட்டான்,சிக்கிம்.பர்மா, பாக்கிஸ்தான்.இலங்கை ஆகிய நாடுகலும் சேர்ந்தே இந்தியாவாக இருந்தது, அசோகர் அக்பர் பேரரசுகளில் ஆப்கானிஸ்தானும் இருந்த்தது.வெள்ளயர்கலுக்கு முன்பு எந்த பேரரசிலும் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு பிரதேசங்களிருக்கவில்லை.

எனவே 1947க்க் பிந்திய இந்திய நாடு அதற்க்கு முன் இன்றைய எல்லைகலுடன் கூடிய அரசு சமூகமாக கூட இருந்தததில்லை.உண்மை இவ்வாறிறுக்க இந்தியா ஒரு பழம் பெரும் தேசிய சமூகம் எனக் காட்டும் முயற்ச்சியில் தரகு முதலாலித்துவ பார்ப்பனிய சக்திகல் கூட்டாக ஈடுபட்டுள்ளனர்,அவர்கலுக்கு வெவ்வெறு காரனங்கலுக்காக இந்தியாவை ஒரு தேசிய சமூகமாக காட்டுவது அவசியமாகிறதுதரகு முதலாலிகளை பொறுத்தவரை அவர்கள் ஏகாதிபத்தியங்கலுடன் கூடி குலவிக்கொண்டிருக்கும் வர்க்கம் அவர்கலுக்கு நாட்டு நலன் மக்கள் நலன் என்பதைவிட தமது பணப்பையின் நல்ன்தான் எப்பொழுதும் முக்கியமானது1857இல் நடை பெற்ற் மாபெரும் கிளர்ச்சியில் படை வீரர்கலும் விவசாயிகலும் குறுநில மன்னர்கலும் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சேட்டுகலும் தாக்கூர்கலும் ஏகாதிபத்திய கம்பெனிகலுடன் கூடி குலாவிக்கொண்டிருந்தததை வரலாறு கூறுகிறது இந்த லேவாதேவி வணிக கும்பலை சேர்ந்த தரகர்கள் தாம் பின்னர் ஏகாதிபத்தியங்கலுடன் சேர்ந்து இந்தியாவின் தொழில் துறையில் இறங்கினர்,ஏகாதிபத்தியயத்தை சார்ந்து இவற்கள் தொடங்கிய தொழில்கல் மற்றோரு வகையில் கொள்ளை லாபம் ஈட்டி தரும் தொழிகலே என்பதால் இவர்கலின் தரகுதனமை மாறிவிடவில்லை.இவ்ர்கலுடைய நலன் எப்போது நாட்டு நலன் மக்கள் நலன்கலுடனன்றி ஏகாதிபத்தியங்கலுடனே பிணைகப்பட்டிருக்கிறது இவ்வாறு தோன்றிய தரகு முதளாலிகலில் மிகப்பெர்ம்பாலோனோர் இந்து மேல்தட்டு சாதிகலை சார்ந்தவர்களக இருந்தார்கள்,இவர்கள் யாவருமேதேனும் ஒரு தேசிய இனத்துடன் கட்டுப்பட்ட சந்தை கொண்டவர்களாக இல்லை.மாறாக அணத்திந்திய சந்தை கொண்டவர்கள் .இவர்கலுடைய சந்தை நலன் பாதுகாக்கப்படுவதற்க்கு அணைத்திந்திய ஒற்றுமை பாதுகாக்கப்படுவது அவசியமாக இருக்கிறது

இதற்க்கு மாறாக பார்ப்பனிய சக்திகள் பார்ப்பன -சத்ரிய கூட்டின் மூலம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகலுக்கும் மேலாக சாதிமுறை சமுதாய அமைப்பையும் அதில் தமது தலைமையாதிக்கத்தையும் ஒட்டுண்ணி வாழ்க்கையையும் இந்தியா முழுவதும் கட்டிக்காத்து வந்துள்ளனர் இதுவரை ஆட்சியில் இருந்து வந்துள்ள எல்ல மன்னர்கலுமே அவர்கல் இந்து மதத்தினறாயினும் வேற்று மதத்த்வறாயினும் படையெடுத்துவந்து ஆட்சியை கைபற்றியவர்கலாயினும் சரி எல்லோருமே பார்ப்பனர்கலுடன் சேர்ந்து இந்து வர்ண் சாதி தர்மத்தையும் அதில் பார்ப்பனிய தலைமையாதிக்கத்தையும் ஒட்டுண்ணித்தனத்தையும் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்,இதை பாதுகாப்பதில் மவுரியர் ஆட்சியிலிருந்து நிலவிய குப்தர் சார்வாகனர்முகலாயர்.மராட்டியர் விஜயநகர அரசுகல் சேர சோழ பாண்டியர்கள் வெள்ளயர்கள் வரை யாரும் விதிவிலக்காயில்லை சுல்தான்கல் ஆட்சியில் முஸ்லிம் மதத்துக்கு மாறிய சூத்திரர்கல் தொடர்ந்தும் சூத்திரர்கலாகவே மதிக்கப்பட்டார்கள்ஷாஷகான் வேதங்கலும் கீதையும் குரான் போலவே இறை வழங்கிய மறைகள் எனக்கூறி மொழிபெயர்த்து பரப்பினார்வெள்ளையர் ஆட்சி இதற்க்கு சற்றும் குறைந்த்ததல்ல வாரன் கேஸ்டிங்ஸ் சாதி கோர்ட்டுகலை நிருவினார்மனு நூல் 1794 இல் இந்து சட்டம் என ஏற்றுக்கொள்ளப்பட்டதுஇவ்வாறு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாலர்கலுடன் கூட்டமைத்துக்கொண்டு தொடர்ந்து சாதியாதிக்க சமூக அமைப்பையும் அதில் தமது தலைமையாதிக்க ஒட்டுண்ணி வாழ்க்கையையும் பாதுகாத்து வந்துள்ள பார்ப்பன சக்திகலுக்கு இனியும் அதை தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ள இந்து மதமும் அதன் அடிப்படையிலான இந்திய ஒற்றுமையும் பாதுகாக்கப்படுவது அவசியமாக படுகிறது

மொழிவழி அமைந்த மக்கள் சமூகங்கள் ,தேசிய இனங்கள் எழுச்சியுற்று அரசுரிமை பெற்ற நவீன தேசங்கலாக அமைந்து விடுமானால் அதில் ஒன்றுபட்ட இந்திய அரசியல் அமைப்பு மட்டுமல்ல இந்து பார்ப்பனிய மதமும் புதைகுழிக்கு சென்றுவிடும் அது அணைத்து இந்திய சந்தை கொண்ட தரகுமுதலாளிய வர்க்கத்தையும் இந்து பார்ப்பனிய சக்திகலையும் புதைகுழிக்கு அனுப்பிவிடும் எனவேதான் தரகு முதலாளிதுவ சக்திகலும் பார்ப்பனிய சக்திகலும் இடைவிடாது இந்திய தேசம் இந்திய தேசிய ஒருமைபாடு பழம்பெரும் பாரத தேசம் என்றெல்லாம் இடைவிடாது கூச்சலிட்டு வருகிறார்கள் அவர்கள் கூறுவதுபோல் இந்திய மக்களையெல்லாம் பிணைத்திருக்கும் அந்த ஒருமித்த பண்பாடு கலாசார ஒருமைபாடு என்பதுதான் என்ன ????????கூட்டி கழித்து பார்த்தால் பார்ப்பன சாதியை தலைமையிடமாக கொண்ட பலபடித்தான சாதியாதிக்க சமூக அமைப்பு அன்றி வேறல்ல.இந்தியாவில் இச்சாதிய அமைப்பு தலை முதல் கால் வரை பரவுயுள்ளது.அதை போலவே இச்சாதிய அமைப்புக்கு புணிதமலிக்கும் கீதையும் புரானங்கலும் இந்தியா முழுவதும் பரவியுள்ளது.

பார்ப்பனர் தலைமையிலான சாதியாதிக்க சமூக அமைப்புதான் பார்பனிய சமூக அமைப்பி.இச்சமூக அமைப்பு தெய்வீக தனமை பொருந்தியது.மீற முடியாதது.மீறக்கூடாதது என்ற விதிகளை ஆதாரமாக கொண்டு மனு,நாரதர் போன்றவர்கள் எழுதிய தர்ம சாத்திரங்கள் போதிக்கின்றன.இத்தர்ம சாத்திரங்களே சமுதாய சட்டங்கள்,சாதியாதிக்க நெறியை விதிக்கும் இச்சமுதாய சட்டங்களில் தலைமையிடம் வகிக்கும் பார்ப்பனர் மன்னுலக தேவர்.இச்சட்டங்களை ச்யல்படுத்தும் மன்னர் கடவுளின் அவதாரம் என்று பிரச்சாரம் செய்கின்றவையே புராணங்களும் இதிகாசங்களும் இவைதாம் இந்து மதத்தின் இலக்கியங்கள்.இந்த இலக்கியங்கள் மக்களை பார்ப்பனர் சத்திரியர்,வைசியர்.சூத்திரர் என்று நாண்கு வர்ணங்களாகவும் எண்ணற்ற சாதிகளாகவும் பிரிக்கின்றன.இதில் பார்ப்பான் எல்லோருக்கும் முதன்மையானவன்.சூத்திரனும் வர்ணமற்றவர்களான சண்டாளர்களும் எல்லோருக்கும் தாழ்ந்தவர்.முதல் மூன்று வருணத்தாரும் இருபிறப்பாளர்கள்.சூத்திரர்கள் அவர்களுக்கு அடிமை சேவகம் செய்யவே பிறந்தவர்கள்,இழி பிறவிகள்.அதனினும் இழி பிறவி சண்டாளன்,அதாவது சமுதாயத்தின் ஒட்டுண்ணிகள் உயர்பிறவிகள்உழைக்கும் மக்கள் இழி பிறவிகள்,இவை எல்லாம் இந்து இலக்கியங்கள் போதிக்கும் தர்ம நெறிகள்.இந்து இலக்கியங்கள் போதிக்கும் இந்த பார்ப்பனிய வரண சாதி தர்ம நெறிகளே இந்து பண்பாடு.இவைதாம் இந்திய மக்களை பிணைத்திருக்கும் கலாசார ஒருமைப்பாடு.ஒருமித்த கலாசாரம் என்பதெல்லாம் இதுதான்.இதுதான் இந்திய பண்பாடு இந்திய தேசிய பண்பாடு,பாரத பண்பாடு என்றெல்லாம் போற்றி புகழப்படுகிறது.

இந்திய தேசிய தலைவர்கள் என்பவர்களே இதை ஒப்ப்கொண்டிருக்கிறார்கள்.இந்திய தேசியத்தின் தந்தை காந்தி கூறினார் 'நான் ஒரு சனாதன இந்து .ஏனெனில் முதலாவதாக வேதங்களை நம்புகிறேன் புராணங்களை நம்புகிறேன் மற்றும் எல்லா இந்து மத ஆதார நூல்களையும் நம்புகிறேன்,இரண்டாவதாக நான் வர்ணாசிரமத்தையும் இன்றைய வடிவத்தில் அன்றி வேதங்கள் கூறி இருப்பதுபோல நம்புகிறேன்.மூன்றாவதாக நான் பசுவதை தடையை நம்புகிறேன்.நானகவதாக உருவ வழிபாட்டில் நான் நம்பிக்கையற்றவனாக இல்லை.தேச்சத்தந்தையின் நம்பிக்கைகளுக்கும் விருப்பத்துக்கும் மாராகவா ஒரு தேசம் உருவாகிவிட முடியும்?இந்திய தேசத்தின் சாரமே இந்து பார்ப்பனியம் என்பதை எல்லா இந்திய தேசிய தலைவர்களுமே ஒப்புகொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் ஒரே ஆட்சி மொழியாக இந்தி மொழியை திணித்ததும் இந்த தரகு முதலாளித்துவ - பார்ப்பனிய ஆதிக்க கூட்டே.தரகு முதலாளிகளுக்கு தமது அனைத்திந்திய சந்தை நலனை காக்கும் பொருளாதார காரணங்களுக்காக ஒரு பொது மொழி அவசியம்,அதே நேரத்தில் அந்த மொழி இந்து பார்ப்பனிய பண்பாட்டை பாதுகாக்ககூடியதாக இருப்பதும் அவசியம்.இந்து பார்ப்பனிய பண்பாட்டின் மொழியாக கடந்த இரண்ட்ட்யிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் மொழி சமஸ்கிருதம்.அது பார்ப்பனர்களால் பார்ப்பனிய சமுதாயத்தி கட்டிகாப்பதற்காக உருவாக்கப்பட்ட மொழி. சமஸ்கிருதம் என்றாலே செய்யப்பட்டது என்றுதான் பொருள்.இருபிறப்பாலர்களுக்காவே உருவாக்கப்பட்ட இந்த மொழி எப்பொழுதுமே மக்கள் மொழியாக இருந்ததில்லை.பார்ப்பனர்கள் மண்ணுலக தேவர்கள் என்றும் சத்திரியர்கள் கடவுளின் அவதாரங்கள் என்றும் தமக்கு தாமே கூறிகொண்டது போல அவர்களுக்காகவே அவர்கள் உருவாக்கிக்கொண்ட சமஸ்கிருத மொழிக்கு தேவ மொழி என்றும் அதன் எழதுததுவடிவுக்கு தேவநாகரி என்றும் பெயர் வைத்துகொண்டனர்.உழைக்கும் மக்களை சூத்திரர் சண்டாளர் என்று இழிவுபடுத்தி ஒடுக்கி வந்தது போலவே அவர்கள் பேசும் மொழிகளை சூத்திரபசை என்றும் நீச பாசை எனறும் இழிவுபடுத்தி ஓடுக்கினர்

பார்ப்பனியத்தின் தேசிய இன ஒடுக்குமுறை வடிவம் தரகு-முதலாளித்துவ பார்ப்பனிய சக்திகள் மேலை ஏகாதிபத்திய - பார்ப்பனிய கலாசாரத்தின் மேலாண்மையை நிறுவி தேசிய மக்களின் மொழி.கலை.இலக்கியம்.கலாசாரத்தினை நசுக்கி வருகின்ற்ன,தரகு முதலாளித்துவ -நிலபிரபுத்துவ வர்க்கங்களை சுற்றியுள்ள மிகசிறிய மேல்தட்டு சதவிகிதத்தினரின் கலாசாரம்தான் தரகு-பார்ப்பனிய கலாசாரம்,மேலை ஏகாதிபத்திய கலாசாரமும் பண்பாடும் மொழியும் வாழ்க்கைமுறையும் உயர்வாணவை விஞ்ஞானபூர்வமானவை.பார்ப்பனிய வாழ்க்கைமுறையும் தேவ மொழியும் கலை இலக்கியமும் நாகரிகமும் பண்பாடும் உயர்வானவை.புனிதமானவை,போற்றபட வேண்டியவை.அதே நேரத்தில் மிகபெரும்பான்மையாய் இருக்கும் தேசிய இன மக்களின்(உழைக்கும்) மொழி கலை,இலக்கியம் பண்பாடு அணைத்தும் இழிவானவை கைவிடபட வேண்டியவை,இது தரகு பார்ப்பனிய கலாசாரத்தின் சாரம்.தரகு-பார்ப்பனிய நெறிகள் தமது கலாசாரத்தின் ஆதிக்கத்தை நிருவியிர்ப்பதன் மூலம் தமது சொந்த தேசிய வரலாறு,தத்துவம்.பண்பாடு,மொழி.இலக்கியம் குறித்த அறியாமையையும்,தமது சொந்த தேசிய கலாசாரம் குறித்த தாழ்வு மனபான்மையையும் அணைத்து தேசிஅ இன மக்களிடையேயும் உருவாக்கி அவர்களை தமது கலாசார அடிமைகளாக்கியிருக்கின்றன

தேசிய இன மக்களின் வரலாறும்,பண்பாடும் பார்ப்பனிய வேத வரலாற்றின்.பண்பாட்டின் பகுதிகளாக கீழ்பட்டதாக ஆக்கபட்டிருக்கிறது,தேசிய மொழிகள் அனைத்தும் பார்ப்பனிய தேவமொழிக்கு கீழ்பட்டதாக்கபட்டிருக்கிறது.அனைத்து உழைக்கும் மக்களும் பார்பனர்களுக்கு கீழ்ப்பட்ட சாதிகலாக்கபட்டிருக்கிறார்கள்,வாழ்க்கைத்தரத்தில் கீழாகவும் கல்வியறிவற்ற பாமரர்கலாகவும் ஆக்கபட்டிருக்கிறார்கள்

தேசிய அரசுரிமை எல்லைகள் இந்து பார்ப்பனிய அரசு எல்லைகளால் விளுங்கபட்டுள்ளன, ஆங்கிலமும் இந்தி மொழியும் ஆதிக்கபீடத்தில் இருக்க தேசிய மொழிகள் பிராந்திய மொழிகளாக நசுக்கபடுகின்றன, தேசிய மொழிகளும் கலை இலக்கியங்களும் ஆங்கில -பார்ப்பனிய மொழி கலை இலக்கியங்களால் சிதைக்கபடுவதும்.ஆங்கில,பார்ப்பனிய வாழ்க்கைமுறையை மேற்கொள்வதும் பெருமைக்குரியதாக்கபட்டிருக்கின்றன

தேசிய இனமாக உருவாகி வரும் பழங்குடி மக்கள் சமூகங்களில் இந்து பார்ப்பனிய கலாச்சாரத்தையும்.இந்தி மொழி ஆதிக்கத்தையும் திணித்து அவர்களுடைய மொழி கலாச்சாரத்தை ஒழித்து கட்டுவதன் மூலம் அவர்களை இந்திய தேசியத்தின் அங்கமாக்கி வருகின்றன.மொத்தத்தில் தரகு-பார்ப்பனிய சக்திகள் தேசிய இன மக்கள் சமூகங்களை இந்திய தேசியத்தால் படிப்படியாக விழுங்கி வருகின்றன,தேசிய இன மக்களின் தேசிய தனித்தன்மைகளையும் உணர்வையும் அழித்து அவற்றின் சுய வளர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் முடமாக்கி அடிமைப்படுத்தி வருகின்றன.

சாளரபட்டியில் சாதி வெறியாட்டம்

சாளரபட்டியில் சாதி வெறியாட்டம்
திட்டமிட்டே தூண்டப்படும் சாதிவெறி தாக்குதல்களால் கோவை ஈரோடு மாவட்டங்கள் போர்க்களமாக மாறிக் கொண்டிருக்கின்றன.
ஈரோடு நம்பியூரில் மண்டபத்தை வாடகைக்கு கேட்ட அருந்ததிய தோழர் மாரியப்பனை சாதியை சொல்லி விரட்டி அடித்தது ஆதிக்க சாதி வெறி கூட்டம்.
பாதிக்கபட்ட தாழ்த்தபட்டோர் மீது வழக்குகள் போட்டும் ,ஊருக்குள் நுழைய தடைவிதித்தும் ஆதிக்க சாதியினருக்கு துணை நின்றது காவல்துறை.உண்மையை மக்களிடம் கொண்டு செலல முயன்ற தாழ்த்தபட்டோருக்கு தடைவிதித்தும்.சாதிவெறியர்களின் கடையடைப்பு - ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கியும் துரோகம் இழைத்தது அரசு நிர்வாகம்.
கோவை சட்டகல்லூரியில் தாழத்தபட்ட மாணவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்துகிறது.சாதி வெறிபடை தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மதியழகன் மீதே வழக்கு போட்டது காவல்துறை.சமரச பேச்சு நாடகம் ஆடி பூசி மெழுகியது கல்லூரி நிர்வாகம்.
கோவை சட்டகல்லூரியில் தாழத்தபட்ட மாணவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்துகிறது.சாதி வெறிபடை தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மதியழகன் மீதே வழக்கு போட்டது காவல்துறை.சமரச பேச்சு நாடகம் ஆடி பூசி மெழுகியது கல்லூரி நிர்வாகம்.
பற்றிய நெருப்பு படர்ந்து மற்றுமொரு சாதி பேயாட்டம் உடுமலை - சாளரப்பட்டியில் நடந்துவிட்டது.இன்னமும் நீடிக்கும் இரட்டைகுவளை முறையை நீக்ககோரியும்,ஆன்டவனை கும்பிட கோவிலுக்குல்லும்- அரசுக்கு சொந்தமான சமுதாய கூடத்துக்குள்ளும் தங்களை அனுமதிக்க கோரியும் வட்டாச்சியரிடம் மனு கொடுத்தனர் அருந்ததிய மக்கள்.
வன்னிய ஆண்டைகளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.தங்களின் சாதிகார ஏழைகளை எல்லாம் வெறியேற்றி தூண்டிவிட்டனா.அருந்ததிய மக்களின் குடிசைகள் அணைத்தும் உடைத்துகொளுத்தபட்டன.5 வயது பாலகன் விக்னேசு முதல் 80 வயது பாட்டி வரை எல்லோரும் அடித்து நொறுக்கப்பட்டனர்.
குறைந்தபட்ச மனிதநேயத்தோடு ஒரு குவளை முறையை நடைமுறைப்படுத்திய மேல்சாதிகாரரின் கடையும் நொறுக்கப்பட்டு அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டது.

இவை அணைத்துக்கும் மேலாக அருந்ததிய மக்களுக்கு பால்.தண்ணீர்.மளிகை பொருள் எதையும் தரக்கூடாது என்றும் த்டைவிதித்து அம்மக்களின் வாழும் உரிமையையும் பறித்துவிட்டனர் சாதி வெறி பிடித்த பயங்கரவாதிகள்.
தேர்ந்தெடுத்த வன்முறை தாக்குதலாலும்.திட்டமிட்ட சதிசெயல்களாலும் சாதியகொடுமைகளை நிகழ்த்தும் குற்றவாளிகளை தண்டிக்காமல் பாதிக்கபட்டவர்களுக்கு எந்த உதவியும் வெளியில் இருந்து கிடைக்காமல் தடுத்தது அரசு.உதவிட ஓடிவந்த தாழ்த்தபட்ட மக்களின் தலைவர்கள் 10 பேரை கைது செய்து சிறையிலடைத்தது காவல்துறை.
மறைமுகமாக காவல்துறையும் - அரசும் துணையிருப்பது போதாது என்றும் தங்களின் வெறியாட்டத்துக்கு ஆதரவாக வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் காட்டுகூச்சல் போடுகின்றனர் சாதி ஆதிக்க வெறியர்கள்
ஏன் இந்த வெறியாட்டம் ?எதற்காக அரசு துணை போகிறது?

குமுறிகொண்டிருந்த தமிழ்தேச மக்களின் இன மான் உணர்வு எரிமலையாய் இன்று வெளிவர தொடங்கி இந்திய - தமிழக அரசுகளை அச்சுறுத்துகிறது.ஈழத்தமிழர்களுக்கு உத்வுவது இந்தியாவுக்கு செய்யும் துரோகம் என்னும் பூச்சாண்டி மிரட்டல்களை எல்லாம் தமிழர்கள் காலில்போட்டு மிதித்து நசுக்க தொடங்கிவிட்டனர்.நதிநீர் சிக்கலானாலும்,கச்சதீவு உரிமை மீட்பு போராட்டமானாலும் தமிழர்கள் ஒன்று திரள தொடங்கி விட்டனர்.இராமன் பாலம் போன்ற மத மாயைகளை உடைத்து தமிழர்களின் பகுத்தறிவு பயணம் தொடங்கிவிட்டது.
இத்தணை உணர்வுகளுக்கும்.இதற்கான போராட்டங்களுக்கும் முக்கிய காரணமானவர்கள் தாழ்த்தபட்ட மக்களே.மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களோடு களம் காண்பவர்கள் சட்டகல்லூரி மாணவர்களே.
தமிழ்தேசம்.தன்மானம்,என்ற உணர்வுகளை வளரவிட்டால் இந்திய சிறைசாலை இருக்குமா?தமிழக மண்ணையும் மக்களையும் கொள்ளை அடிக்க முடியுமா?அரசும்.அரசியல்வாதிகலும் கொழுத்து திரிய முடியுமா?
என்ன செயலாம் என்று திகைத்து நின்ற இவர்களை சாதி வெறி ஆதிக்கவாதிகள் காப்பாற்ற தொடங்கியுள்ளனர்.

சாதிவெறி ஆதிக்கவாதிகள் ஏன் பேயாட்டம் போடுகின்றனர்?
நிலங்களை வைத்துகொண்டு,வேளாண் தொழிலை அடிப்படையாககொண்ட இவர்களின் கொட்டம் இன்று ஆட்டம் காண தொடங்கிவிட்டது.பன்னாட்டு விதை,உரம்.பூச்சி மருந்து கொள்ளையாலும்.ரிலயன்ஸ் ஃப்ரெஷ் போன்ற காய்கறி வணிகத்தில் கால்பதித்த கொள்ளையர்களாலும் இவர்களின் பண்ணையார்த்தனம் சவப்பெட்டிக்கு அனுப்பப்படுகிறது.
இன்னொருபுறம் பனியன் மற்றும் விசைத்தறி தொழில்சார்ந்த வேலை வாய்ப்புகளை நோக்கி தாழ்த்தபட்ட மக்கள் பண்ணைகளில் இருந்து வெளியேறிகொண்டிருக்கின்றனர்.இதனால் சாதி ஆதிக்கவாதிகள் தங்களின் சுகபோக வாழ்வும் சுரண்டலும் பறிபோவதை கண்டு பதறி துடிக்கிறார்கள்.
நெடிய போராட்டத்தின் மூலம் பெற்ற குறைந்தபட்ச கல்வி மற்றும் சீர்த்திருத்த வாய்ப்புகளால் தாழ்த்தபட்ட மக்கள் விழிப்படைந்து தங்களுக்குல் அமைப்பாக தொடங்கியுள்ளனர்.இதனால் மக்கள் விரோதிகளான ஓட்டுபொறுக்கி கட்சிகளின் ஆயுள் எண்ணப்படுகிறது
எனவே சாதிவெறி ஆதிக்கவாதிகளும்,ஓட்டுபொறுக்கி கட்சிகளுக்ம் சேர்ந்துகொண்டு தாழ்த்தபட்ட மக்கள் மீது போர் தொடுக்கின்றன.நம்பியூரில் அருந்ததிய மக்களுக்கு எதிராக சாதி ஆதிக்கவாதிகளோடு தி.மு.க அ.தி.மு.க காங்கிரசு,பா.ம.க,தே.மு.தி.க,கொங்கு பேரவை என அணைத்து கட்சிகளும் கூட்டு சேர்ந்து ஆட்டம் போட்டன.மக்கள் சாதிசண்டையில் சிக்கிகொள்வது ஆளும்வர்க்க கொள்ளைக்கு வசதியாக இருப்பதால் அரசும்.காவல் துறையும் சாதி வெறியர்களுக்கு தூபம் போடுகிறது.

சாதி வெறியாட்டட்தில் ஈடுபடும் உயர்சாதி உழைக்கும் மக்களே
உயர்சாதி திமிர் உங்கள் கண்ணை மறைப்பது தெரியவில்லையா?உங்களின் வாழ்க்கையை பறித்தவர்களுக்கு நீங்களே அடியாள் படையாக இருப்பது வெட்க்ககேடு இல்லையா?
உங்களின் வேளாண் தொழிலும்.சிறு தொழிலும் அழிந்து நீங்கள் பஞ்சைபராரியாக மாற யார் காரணம்?உங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்காமல் கல்வியை விலை பேசுவது யார் ?இட ஒதுக்கீடு தடுக்கப்படுவது எப்படி?
உலகமயமாக்கல் என்ற பெயரில் நமது வளங்கள் கொள்ளை போகின்றன.அதன் வேலை வாய்ப்புகளையும்.வசதிகளையும் பார்ப்பன -உயர்சாதி பணக்காரர்கள் பங்குபோட்டுகொள்கின்றனர்.
இதை அறியாமல் நீங்களோ சாதி திமிரால் உங்களின் பிள்ளைகளுக்கு பிறக்கும்போதே கல்லறைகளை சம்பாதித்து தருகிறீர்கள்.

ஆனால் தாழ்த்தபட்ட மக்கள் உங்களுக்கும் சேர்த்து இட ஒதுக்கீட்டுக்காக போராடுகிறார்கள்.
சாதிய கொடுமைகளை எதிர்ப்பதன் மூலம் உங்களை நாகரீக மனிதர்களாக மாற்றுகிறார்கள்.
இந்த மண்ணையும் மக்களையும் காக்கும் போராட்டங்களில் முன்னனியில் இருக்கிறார்கள்.
ஆதிக்க சாதி உழைக்கும் மக்களே
உயர்சாதி திமிரை ஒழிப்போம்
சாதிவெறி ஆதிக்கவாதிகளை புறக்கணிப்போம்
தாழ்த்தபட்ட தமிழரோடு உழைக்கும் தமிழராய் ஒன்றினைவோம்
அரசு மற்றும் ஆதிக்கசாதிவாதிகளின் சதியை முறியடித்து
புரட்சி தமிழ்தேசம் படைப்போம்

புரட்சிகர இளைஞர் முன்னனி - கோவை