தொடரும் சாதி வெறி கொடுமைகள்
இந்திய சுதந்திரத்தின் பொன் விழா முடிந்து வைர விழாவும் வரபோகின்றது.ஆனால் தாழ்த்தப்பட்டவர்கலுக்கு பொது மண்டபத்தில் காதணி விழா நடத்தக்கூடாது என்று நம்பியூரில் சாதிஆதிக்கத் திமிர் வெறியாட்டம் போடுகின்றது இந்திய குடிமகன் ஒவ்வொருவனும் இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்றும்,உலகத்திலேயே மிகபெரிய சனனாயக நாடு இந்தியா என்றும் ஆளும் வர்க்கங்கலும் பிழைப்புவாத ஓட்டு கட்சிகலும் என்னதான் கூப்பாடு போட்டாலும் புளுத்துப்போன பார்ப்பனிய சாதிஆதிக்கத்தின் முடைநாற்றத்தை மூடி மறைக்க முடிவதில்லை பொதுகினறில் நீர் எடுக்க தடை.ஊருக்குள் நிலம் வாங்கவோ,குடியிருக்கவோ தடை.செத்தால் புதைக்க பொது சுடுகாட்டுக்குத் தடை,கோவிலுக்குள் நுழையத்தடை.இரட்டை குவளை முறை.சேரியில் வாழ்க்கை என்று தாழ்த்தப்பட்டவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறது கீழ்வெண்மனி.சமயநல்லூர்,திண்ணியம்.பாப்பாபட்டி.கீரிப்பட்டி.நாட்டார்மங்கலம்.கண்டதேவி என சாதியாதிக்க திமிருக்கு அடங்க மருத்து தாழ்த்தப்பட்ட மக்கள் போராட எழும்போதெல்லாம் சாதி ஆதிக்கவாதிகலும்,அவர்களை பாதுகாக்கும் அதிகாரவர்க்க அரசு எந்திரமும் பிழைப்புவாத ஓட்டுகட்சிகலும் ஓரணியில் நின்று அடக்கு முறைகளை கட்டவித்து விடுகின்றனர்.
நம்பியூர் பிலியம்பாளைத்தை சேர்ந்த விஜயா - மாரியப்பன் ஆகியோர் தமது குழந்தையின் காதணி விழா நடத்த மண்டபம் கேட்டபோது தாழ்த்தபட்டவனுக்கெல்லாம் மண்டபம் தர முடியாது என்று சாதி திமிரோடு அவமானப்படுத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர் கவுண்டர்.முதலியார் சாதியை சேர்ந்த சாதியாதிக்க வாதிகள்அதற்கு பணியாது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பாதுகாப்பும் உரிமையையும் பெற்றுத்தர வேண்டும் என் போராடியபோது பேச்சுவார்த்தை என்கிற போர்வையில் மண்டபம் தர முடியாது என்று சொல்வது அவர்களது உரிமை என்று ஆதிக்க சாதி திமிருக்கு உரிமை பட்டம் சூட்டி சாதி விசத்தை கக்கினார் கோபி வட்டாச்சியர்.144 தடை உத்தரவு போட்டு ஊரைவிட்டே துரத்தியடித்திருக்கிறது அதிகார வர்க்க கூட்டம்.எத்தணைதான் வன்கொடுமைகளை தாங்கள் நடத்தினாலும் தாழ்த்தப்பட்ட்வன் போராட கூடாது.உரிமை கேட்க்க கூடாது என்று அடாவடியாய் நின்ற சாதியாதிக்கவாதிகள் கவுண்டர்,முதலியார் மற்றும் பிற சாதியில் உள்ள உழைக்கும் மக்களிடம் இன்று மண்டபம் கேட்ப்பான் நாளை நம் வீட்டு பெண்ணையே கேட்பான் என்று அவர்களிடம் உள்ள சாதிய உணர்வை தூண்டி சாதிவெறியூட்டி தாழ்த்தபட்ட மக்களுக்கு எதிராக கொம்பு சீவி விடுகின்றனர்.இதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை பாதுகாத்துக்கொள்கின்றனர்.மறியல் பேரணி கடையடைப்பு,கருப்புக்கொடி ஏந்துதல் என்று தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
சாதிவெறியர்களின் கூடாரமாகவே உள்ள ஓட்டு கட்சிகளின் தலைவர்களான காங்கிரசு மாவட்ட தலைவர் மொடக்குறிச்சி எம் எல் ஏ பழனிசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சரவணன்,பவானிசாகர் திமுக எம் எல் ஏ ஜீவா சுப்பிரமணி,அதிமுக மும்மாள் எம்பி வி.கே.சின்னசாமி,தேமுதிக.ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உட்ப்பட பலர் த்மது சாதி ஆதிக்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிராக அணி சேர்ந்துள்ளனர்.தாழ்த்தப்பட்டோரை போலவே கவுண்டர்.முதலியார் மற்றும் பிற சாதி உழைக்கும் மக்களும் சூத்திரர்களாக இழிவுபடுத்தப்பட்டு பார்ப்பனியத்தின் காலடியில் மண்டியிட்டு கிடக்கின்றனர்.இது அந்த சாதிவெறியர்கலுக்கு கேவலமாகப்படவில்லை.பார்ப்பனியத்தின் சாதியாதிக்க சுரண்டல் நலனில் பங்கு போட்டுக்கொள்ளும் இந்த கும்பல் தாழ்த்தபட்டோரிடத்தில் தனது சாதி திமிரை காட்டுகின்றது.உயர்சாதி உழைக்கும் மக்களிடத்தில் சாதிய வெறியை ஊட்டி பார்ப்பனியத்தை பாதுகாக்கின்றது அன்பார்ந்த தமிழக உழைக்கும் மக்களே சாதியாதிக்கவாதிகளின் உயர்சாதி திமிரால் தன்மானம் இழந்து இனியுமா அடங்கி கிடப்பது உயர் சாதி திமிரை ஒழித்துக்கட்டுவோம் உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம் சாதிவெறியர்கலுக்கு துணை நிற்கும் அரசியல்கட்சிகளை விரட்டியடிப்போம்
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
Post a Comment