பொதுதளத்தில் இருக்கும் தமிழர் பலருக்கும் இந்து என்கிற அடையாளத்தின் உண்மையான உள் அர்த்தம் தெரியாததாலும் பார்ப்பனிய ஊடகங்கள் பரப்பும் நாம் இந்து என்கிற உணர்வுக்கு எளிதாக பலியாவதாலும் ஓட்டு பொறுக்கி அரசியலில் சமீப தேர்தல்களில் இந்து பயங்கரவாத கும்பல்கள் பெரும் வெற்றிகள் அந்த கூட்டத்தின் கொட்டத்தை அதிகபடுத்தியிருப்பதாலும் இந்து என்றால் பார்ப்பான் மட்டுமே மற்றவர்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்திகொள்ள மனு அதர்மத்தின் சில பகுதிகளை இப்பொழுது இங்கே பதிவிடுகிறேன்
(அத் 1 : 31) உலக விருத்தியின் பொருட்டு ப்ரம்மாவானர் தன்னுடைய முகம் புஜம் துடை கால் இவைகளினின்று முறையே பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் இவர்களை உண்டுபண்ணினார்
(அத் 1 : 87) அந்த ப்ரம்மாவானவர் இந்த உலகத்தை காப்பாற்ற தன் முகம் தோள் துடை பாதம் இவைகளினின்று உருவான பிராமண சத்திரிய வைசிய சூத்திரவருனத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களை தனிதனியாக பகுத்தளித்தார்(பிறப்பின் அடிப்படையில்)
(அத் 1 :100) பிராமணன் முதல் வருணத்தான் என்பதாலும் ப்ரம்மாவின் முகத்தில் இருந்து பிறந்தவன் ஆகையாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகலவருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்
(அத் 1 :101) ஆதலால் பிராமணன் ஒருவரிடத்தில் தானம் வாங்கினலும் தன்பொருளையே சாப்பிடுகிறான் தன் வஸ்த்திரத்தையே உடுத்துகிறான் தன் சொத்தையே தானஞ்சய்கிறான் மற்றவர்கள் அவனுடைய கருணையினாலே அவற்றை அனுபவிக்கிறார்கள்.
(அத் 9 :318 319)ஒளியுள்ள அக்னியானது மயானத்தில் பிணத்தை தகித்தாலும் நிந்தனையில்லாமல் யாகத்தில் எப்படி ஃஒமத்தில் விர்த்தி செய்யப்படுகிறதோ அப்படியே பிராமணர்கள் கெட்ட செயல்கலில் ஈடுபட்டிருந்தாலும் சகலமான சுபகாரியங்கலிலும் பூசிக்கத்தக்கவர்கள் மேலான தெய்வம் அவர்கள்
(அத் 10 : 73) பிராமணன் தொழிலை செய்தாலும் சூத்திரன் பிராமண சாதியாகமாட்டான்.ஏனென்றால் அவனுக்கு பிராமனஜாதி தொழில் அதிகாரமில்லையல்ல்வா? சூத்த்ரன் தொழிலை செய்தாலும் பிராமணன் சூத்திரஜாதியாக மாட்டான்.ஏனென்றால் அவன் ஈனத்தொழிலை செய்தாலும் அவன் ஜாதி உயர்ந்ததல்லவா? இப்படியே இந்த விசயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார்
(அத் 11 :84)பிராமணன் பிறவி சிறப்பாளன்: தேவரும் மதிக்க தக்கவன்: மனிதரில் உயர்ந்தவன்: தேவமந்திரமே அவன் உயர்வுக்கு காரணம்.எனவே எல்லோரும் அவன் முடிவுப்படி நடக்க வேண்டும்
(அத் 2 : 135) பத்து வயதுள்ள பிராமணனையும் நூரு வயதுள்ள சத்திரியனையும் தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டுவது.பிராமணன்(பத்து வயது பையன்) தகப்பன் மரியாதையும் நூஒரு வயதுள்ள சத்திரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டுவது.
அத் 2 : 31) பிராமணனுக்கு மங்களத்தையும் சத்திரியனுக்கு பலத்தையும் வைசியனுக்கு பொருளையும் சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இட வேண்டியது.
(அத் 2: 32) பிராமணனுக்கு சர்மவென்றும் சத்திரியனுக்கும் வர்மவென்றும் வைசியனுக்கு பூதியென்றும் சூத்திரனுக்கு தாசனென்றும் பெயரை இட வேண்டியது.
(அத் 2 : 155) பிராமணனுக்கு ஞானத்தினாலும்(பிறவி) சத்திரியாளுக்கு வீரியத்தினாலும்,வைசியனுக்கு தானிய்ம் பொருள் இவைகளினாலும் சூத்திரனுக்கு வயதினாலும்( பிறப்பின் அடிப்படையிலேயே சூத்திரன் தாழந்தவன் என்று அர்த்தம்) மேன்மையுன்டாகிறது.
பெண்கள் பற்றி (அத் 2 : 213) மாதர்களின் சுபாவமே சிரிங்கார சேஸ்ட்டைகளினால் தோசத்தையுன்டுபண்ணும் ஆதலால் தெரிந்தவர்கள் அவர்களிடத்தில் அசாக்கிரதையாய் இருக்க மாட்டார்கள்
(அத் 2 : 214) ஜிதேந்திரியனாயிருந்தாலும் மூடனாயிருந்தாலும் அவனை மாதர்கள் தன் சம்பத்தினால் காமகுரோததுதுக்கு உட்ப்பட்டவனாக செய்கிறார்கள்
(அத் 215) தாய் தங்கை இவர்கலுடனும் தனியாக ஒன்றாக உட்காரகூடாது இந்திரியங்களின் கூட்டமானது மிகவும் பலமுடையது அது தெரிந்தவனையும் மயக்கிவிடும்.
(அத் 2 : 240) மாதர்கள் இரத்தினங்கள் தர்மம் ஆசாரம் நல்ல வசனம் இன்னுன் நல்ல சிற்பசாஸ்த்திரம் இவைகளை எவ்விடத்தில் இருந்தாலும் கிரகித்துகொள்ளலாம்(மாதர்கள் என்று பெண்களையும் பொருள்களின் வரிசையில் வைத்துவிட்டார்கள்)
(அத் 3 :13) சூத்திரனுக்கு தன்சாதியிலும் வைசியனுக்கு தன்சாதியிலும் சூத்திரசாதியிலும்.சத்திரியனுக்கு தன்சாதியிலும் வைசிய சூத்திரசாதியிலும்,பிராமணனுக்கு தன்சாதியிலும் மற்ற மூன்று சாதியிலும் விவாகம் செய்துகொள்ளலாம்.
சூத்திரன் தன்சாதியை தவிர்த்து பிற சாதிகளில் விவாகம் செய்ய கூடாது
வைசியரும் சத்திரியரும் கூட பிராமண பெண்களை மனக்க கூடாது.
(அத் 3 : 14) பிராமணன் சத்திரியன் இவர்களுக்கு தன் வருணத்து கன்னிகை அகப்படாத ஆபத்து காலத்திலும் சூத்திர கன்னியை விவாகம் செய்ய கூடாது.
(அத் 3 : 15) தன்சாதிக்கு தாழ்ந்த சாதியில் விவாகஞ்செய்து கொள்ளுந் துவிஜர்கள் தன் குலத்தையும் புத்திராளையும் சூத்திரதன்மையை அடைவிக்கிறார்கள்( மறுபடியும் பிறப்பின் அடிப்படையிலேயே சூத்திரன் தாழ்ந்தவன் என்கிறார்கள்)
(அத்3 : 17) படுக்கையிலே சூத்திர கன்னிகையோடு சமமாய் படுத்திருக்கிற பிராமணன் நரகத்தையடைகிறான்.பிள்ளையுண்டு பன்னினால் பிராமண தண்மையிலிருந்து(பிறப்பின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் பிராமண தண்மையிலிருந்து) நீங்கி விடுகிறான்.
(அத் 3 :18) எவனுக்கு தன்சாதியில் பிள்ளையில்லாமல் சூத்திர சாதியிற் பிறந்தவன் வைதீக கர்மங்களை செய்கிறானோ அந்த அவிசை தேவர்களும் பிதுர்க்களும் புசிக்கமாட்டார்கள் ஆகையால் அவனுக்கு சுவர்க்காதி புண்ணியலோகமில்லை.
(அத் 3 : 19) சூத்திர ஸ்திரியின் அதரபாணஞ் செய்தவனுக்கும் அவள் மூச்சுகாற்று மேல்பட்டவனுக்கும்,அவளிடத்தில் பிறந்தவனுக்கும் பிராயச்சித்தமே கிடையாது.
(அத் 3 : 241) பன்றி மோத்தலினாலும் கோழிசிறகின் காற்றினாலும் நாய் பார்வையினாலும் சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகிறது.
(அத் 3 : 249) எவன் சிரார்த்தஞ்செய்து மிகுந்த அன்னம் முதலியவற்றை சூத்திரனுக்கு போடுகிறானோ அந்த மூடன் காலசூத்திரமென்னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான்.
(அத் 4 : 14) அவனவன் வருணாசிரமங்கலுக்கு தக்கதாக வேதத்திலும் தருமசாஸ்த்திரத்திலும் சொல்லப்பட்டிருக்கிற நித்திய கருமங்களை நாள்தோறும் சோம்பலில்லாமல் செய்யவேண்டியது.அவைகளை செய்கிறவன் மேலான கதியை அடைகிறான்.
(அத் 4 : 165) துவிஜாதியானாலும் பிராமணனை அடிக்கவேண்டுமென்று ஆயுதத்தை கையினாற் தூக்கினால் தாமிசிரமென்னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான்.
(அத் 4 : 166) பிராமணனை செத்தை முதலியவறால் தெரிந்து கோபங்கொண்டு அடித்தால் இருபத்தோரு ஜென்மம் நாய் முதலிய பாபசாதியில் பிறக்கிறான்.
(அத் 4 :245) பிராமணன் வேதத்தினாலும் உயர்ந்தோரிடத்தில் சகவாசம் பண்ணிகொண்டும் ஈனர்கலுடன் சகவாசஞ்செய்யாமலும் இருந்தால் சிரேஸ்ட்டதன்மையடைவான் இல்லாவிட்டால் சூத்திரனுக்க்கு சமமாவான்.
(அத் 5 : 147)பாலியமாயிருந்தாலும் யவ்வனமாக இருந்ததாலும் வார்திபமாகவிருந்தாலும் ஸ்திரிகள் தன்றன் வீடுகளில் தன்மனம்போனபடி ஒரு காரியத்தையும் செய்யகூடாது.
(அத் 5 : 148) பாலியத்தில் தகப்பன் ஆக்ஞையிலும் யவ்வனத்தில் கணவன் ஆக்ஞையிலும் கணவனிறந்த பிறகு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்கவேண்டியதே அல்லாது ஸ்த்திரிகள் தன் சுவாதீனமாக ஒரு போதுமிருக்க கூடாது.
(அத் 5 : 164) கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரிலோலனாயிருந்தாலும் நற்குனமில்லாதவனாயிருந்தாலும் பதிவிரதையான ஸ்த்திரியானவள் அவனை தெய்வத்தை போல பூசிக்க வேண்டியது.
(அத் 7 : 37) அரசன் தினம்தோறும் காலையில் எழுந்து மூன்று வேதத்தையும் ஓதினவர்களாகவும் நீதிசாஸ்த்திர வித்வானகளாகவும் இருக்கிற பிராமணாளை உபசரித்து அவர்கள் சொல்கிறபடி நீதி செலுத்த வேண்டும்
(1870 வரை இந்திய மன்னர்கள் அப்ப்டியேதான் மனு நீதி செலுத்தி வந்தார்கள்,இஸ்லாமிய மன்னர்களும் இதில் விதிவிலக்கல்ல தண்டனை சட்டத்துக்கு இஸ்லாமிய சட்டங்களையே இந்துக்களுக்கு கடைபிடித்த அவர்கள் மற்ற வழக்குகலுகு மனு அதர்மத்தின் படிதான் (அ)நீதி செலுத்தினார்கள்.
(அத் 7 :133) அரசன் எளியவனாக இருந்தாலும் வேதமோதின பிராமணனிடத்தில் ஒருபோதும் தீர்வை வாங்க கூடாது.அந்த பிராமணனும் தன் தேசத்தில் பசியினால் துன்பப்பட கூடாது.
(அத் 7 :134) எந்த அரசன் ராச்சியத்தில் வேதமோதியவன் சாப்பாடுக்கில்லாமல் துண்பப்படுகிறானோ அந்த அரசனின் தேசம் சாபத்தினால் துன்பப்பட்டு அழிந்துவிடும்.
(அத் 8 : 20) பிராமண குலத்தில் பிறந்து கர்மானுஸ்ட்டமில்லாத பிராமணேனும் அரசன் செய்ய வேண்டிய தீர்மானங்களை செய்யலாம்.சூத்திரன் ஒருபோதும் தீர்மானம் செயலாகாது.
(அத் 8 : 21) எந்த தேசத்தில் அரசன் செய்ய வேண்டிய தருமவிசாரணையை சூத்திரன் செய்கிறானோ அந்த தேசம் முழுவதும் பார்த்துகொண்டிருக்கும்போழுதே சேற்றிலகப்பட்ட பசுவைப்போல துன்ப்பப்படுகிறது.
(அத் 8 22) எந்த தேசத்தில் சூத்திரர் தெய்வத்தை நிந்திக்கிறவர்கள் இவர்கள் அதிகமாயும் ஜாதிகளில்லாமலும் இருக்கிறார்களோ அத்தேசம் முழுவதும் வறுமைநோய் இவைகளால் துண்பபட்டு சீக்கிரத்தில் அழிந்துபோய்விடும்(பார்ப்புகளுக்கு பிழைக்க வழியில்லாத ஊர் அழிந்து போகும் என்று அர்த்தம்)
(அத் 8 24) வழக்கின் உயர்வு தாழ்வு லாபம் னஸ்ட்டம் தருமம் அதர்மம் இவைகளை நன்றாக அறிந்து வருணாசிரம கிரமத்தின்படி (சூதிரனுக்கு ஒரு நீதி.பார்ப்பானுக்கு ஒரு நீதி) வழக்கை விசாரிக்க வேண்டியது.(அத் 8 38) அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால் அதில் பாதியை பிராமணர்களுக்கு தானஞ்செது மற்றதை தன் பொக்கிசத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டியது.
(அத் 8 : 270) சூத்திரன் துவிஜர்களை கொடுமையாக திட்டினால் அவன் தாழ்ந்தவிடமாகிய காலில் பிறந்ததால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்.
(அத் 8 : 271) துவிஜர்களை பெயர் ஜாதி இவைகளை சொல்லி இகழ்ச்சியாக திட்டுகிற சூத்திரம் வாயில் பத்தங்குலமுள்ள எக்கு கம்பியை காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டும்.
(அத் 8: 272) அகங்காரத்தால் நீயிதை செய்ய வேண்டுமென்று பிராமணனுக்கு தருமத்தை உபதேசிக்கிற சூத்திரனுடைய வாயிலுங் காதிலும் எண்ணையை காய்ச்சி ஊற்ற வேண்டியது.
(அத் 8 :273) ஒருவனை பார்த்து நீ சாஸ்த்திரம் ஓதவில்லை நல்லதேயத்தில் பிறந்தவனல்ல நல்லகுலத்தானுமன்று,சாதகம் கர்மம் முதலிய சரீரசமுஸ்காரமும் உனக்காகவில்லை என்று இவ்விதமாக அக்கிரமமாக அதட்டுகிற துவிஜர்கலுக்கு இருநூரு பணம் தண்டம் விதிக்க.
(அத் 8 : 279) சூத்திரன் துவிஜாதிகளினது எந்தெந்த அவயங்களை கையினாலாவது ஆயுதங்கலினாவது அடிக்கிறானோ அவனுடைய அந்தந்த அவயங்களை துண்டிக்க வேண்டும்.
(அத் 8 : 280) கோபத்தினால கையையாவது தூக்கியடித்தால் அவன் கைய்யையும் உதைத்தால் அவன் காலையும் துண்டிக்க வேண்டும்.(அத் 8:281) பிராமணனுடன் சூத்திரன் சரியாசனத்தில் அமர்ந்தால் அந்த சூதிரனை அவனுக்கு இடுப்பிற் சூடு போட்டாவது ஆசனத்தை அறுத்தாவது ஊரைவிட்டே துரத்தி விட வேண்டும்.
(அத் 8 :282................)
(அத் 8 : 283) அகங்காரத்தால் பிராமணனின் தலைமயிர் கால் தாடி மீசை இவைகளை பிடிக்கிற சூத்திரன் கைகளை யோசிக்காமல் வெட்ட வேண்டும்.
(அத் 8 : 379 பிராமணனுக்கு தலையைமுண்டஞ்செய்து கொல்லும் கொலை தண்டனை விதிக்க கூடாது.மற்ற வருணத்தாருக்கு கொலை தண்டனை உண்டு.
(அத் 8 : 380) பிராமணன் எல்லா பாவஞ்செய்தாலும் அவனைகொல்லாமல் காயமின்றி அவன்பொருளுடன் ஊரைவிட்டு துரத்த வேண்டும்.
(அத் 8 :381) பிரம்மஹத்தியை விட அதிகமான பாவம் உலகதில்கிடையாது என்பதால் பிராமணனை கொல்ல வேண்டுமேன்று அரசன் மனத்தாலும் நினைக்க கூடாது.
(அத் 8 : 413) பிராமணன் சம்பளங்கொடுத்தேனும் கொடுக்காமலும் சூத்திரனிடம் வேலை வாங்கலாம் ஏனெனில் சூதிரர்கள் பிராமணனுக்கு பணிவிடை செய்வதற்காகவே படைக்கபட்டிருக்கிறார்கள் ப்ரம்மாவால்.
பொதுதளத்தில் வெளியிட முடியாத அளவுக்கு கீழ்தரமான விசயங்களாக இருப்பதால் இத்தோடு நிறுத்திகொள்கிறேன் இங்கே பதிவிட்டதற்கு முக்கிய காரணமே இந்து பயங்கரவாதிகள் அமைப்போம் என்று சொல்லிகொண்டிருக்கிற ராமராஜியத்தில் எல்லோருக்குமான சட்டமாக அமைய்யபோவது இந்த மனு அதர்மம்தான் இதை நான் சொல்லவில்லை சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை என்று முக்கிய மன்னிக்கவும் முழக்கிய லோஓஓஓகமான்ய பால கங்காத திலகர் என்பவரும் சொன்னது.மராட்டிய சித்பவன் பிராமணர்களின் கும்பலால் தொடங்கப்பட்டு கொலைவெறியாட்டம் ஆடி வரும் இந்து பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியது ஜனனாயக சக்திகளின் சவாலான கடமை ஆகும்
Monday, December 31, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment