Wednesday, January 2, 2008

மொழி.தமிழ் ஒரு பார்வை மற்றும் சில தகவல்கள்

மொழி என்பது மக்கள் வாயில் வழங்கும் ஒலித்தொகுதியேயன்றி அவரினும் வேறான ஓர் உயரி அல்லது உருவம் அன்று.மக்கள் தம் தாய்மொழியை பேசினால் அன்றேல் அது வாளும் அன்றேல் மாளும்.ஒரு மொழி வழக்கிற்க்கு இன்றியமையாத சார்பு அல்லது நிலைக்களம் அதை பயன்பாட்டிலிருத்தும் மக்களே. - மொழிஞாயிறு தேவனேய பாவாணர்

மொழி என்பது நம்முடைய சிந்தனை,புலன் உணர்வு மனவெழுச்சி மற்றும் நம் சமுதாயப் பண்புகளை மதிப்பிட பயன்பட கூடிய கருவி மட்டுமல.மொழி அது அடிப்படையில் ஒரு சமூகத்தின் அடையாளம். - எட்வர்ட் சேப்பியர்

மொழியே நம் சிந்தனையின் விளக்கு - சான் டூவர்ட் மில்.

மொழி என்பது நம் சிந்தனை மற்றும் உணர்வை மேம்படுத்துவது அல்ல.அது நம்முடைய உண்மையை பற்றிய பார்வையையும் தீர்மானிக்கிறது. - பெஞ்சமின் வார்ட்.

மொழி என்பது ஒரு முக்கியமான கருவி அது கருத்தையும் சிந்தனையையும் பறிமாறிகொள்ள பயன்படுகிறது மட்டுமல்ல இது நட்பு,கலாசாரம் மற்றும் வணிகம் அணைத்தையும் தொடர்புபடுத்தும். ஒரு மொழியின் முகாமையான பயன்பாடு என்பது உயர்ந்த எண்ணங்களை ஊட்டுவதும்.ஊக்கமூட்டுவதும்,மற்றும் உயர்த்துவதும் மொழியே.

உலகில் கிட்டத்தட்ட 7000 மொழிகள் உள்ளன,இந்த நூற்றண்டின் இறுதிக்குள் 3000 மொழிகள் அழியும் தருவாயில் உள்ளது - யுனெஸ்கோ

உலகில் உள்ள மொழிகள்
ஆப்பிரிக்கா 2092
அமெரிக்கா 1002
ஆசியா 069
ஐரோப்பா 239
பசிபிக் 1310

ஆசியாவிற்கு அடுத்தபடியாக ஆப்பிரிக்காவில் அதிக மொழிகள் பேசப்படுகிறது,அமெரிக்காவில் குறைந்த நபர்களினால் அதிக மொழிகள் பயன்படுத்தப்படுகிறது,ஆசியாவில் அதிக மொழிகள் பெருவாரியான மக்களால் பேசப்படுகிறது.இந்தியாவில் உள்ள மொழிகள் 1961 ஆம் ஆண்டு கணக்குபடி மொத்த தாய்மொழிகள் 1652.இவை 826 மொழி கூட்டங்களாக வகுகப்பட்டன.இந்தியாவின் தேசிய மொழிகளாக 15 ,இவற்றுள் 380 தாய்மொழிகள் அடங்குகின்றன.தேசிய மொழிகள் என்று தகுதி பெறாத பெருமொழிகள் 17 இவற்றில் 241 தாய்மொழிகள் அடங்குகின்றன.71 தாய்மொழிகள் ஐந்து லட்சம் பேர் பேசுகின்றனர்.857 தாய்மொழி ஒரு இலட்ச்சம் பேருக்கும் குறைவானோரால் பேசப்படுகிறது.இந்திய மொழிகள் அல்லாத தாய்மொழிகள் 103.இதில் 244 தாய்மொழிகளை வகைப்படுத்த 60 மொழிபிரிவுகளாகவும் மீதியுள்ள 613 வகைப்படுத்த முடியாத தாய்மொழிகளாகவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன

14 தேசிய மொழிபேசுவோர் எண்ணிக்கை விழுக்காட்டில் 1991 கணக்கெடுப்பின்படி
சமஸ்கிருதம் 0.000

மணிப்பூர் 0.002

காசுமீர் 0.001

நேப்பாளி 0.01

சிந்தி 0.07

தெலுங்கு 0.15

கொங்கனி 0.16

கன்னடம் 0.37

மலையாளம் 0.43

தமிழ் 0.43

பஞ்சாபி 0.44

உருது 0.50

மராத்தி 0.76

குஜராத்தி 0. 90

ஒரியா 1.04

அசமி 1.47


செவ்வியல் மொழிக்கான வரயறை அம்மொழிக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்க வேண்டும்,அது வேறெந்த பாரம்பரியத்திலிருந்து பிரிந்து வந்ததாக இருக்க கூடாது.தன்னை சார்ந்து நிற்கும் மொழிகளுக்கு அடிப்படையை கொடுத்திருக்க வேண்டும்.வேறு எந்த மொழியும் இதன் மீது பலகாலம் ஆதிக்கம் செலுத்தியிருந்தபோதிலும் இது தன் நிலையில் தளர்ச்சி பெற்றிருக்க கூடாது.தானாக உருவாகி இருக்க வேண்டும் அதற்கென்று பழமையான செல்வாக்கான இலக்கியங்கள் இருக்க வேண்டும்.தமிழ் மொழி

தொனமை முன்மை எண்மை ஒண்மை
தனிமை இனிமை தாய்மை தூய்மை
செம்மை மும்மை கலைமை தலைமை
இளமை வளமை முதுமை புதுமை

ஆகிய 16 இயன்மொழி கூறுகளை கொண்ட நம் தமிழ் செவ்வியல் மொழிகளை காட்டிலும் உயர்வானது.

தாய்மொழி பிறப்பின் அடிப்படையில் அல்லது மூதாதையரிடமிருந்து இயல்பாக வருவது.சுருங்கசொல்லின் ஒரு தாயின் இடத்தை பிடித்து.தாயை போலிருந்து ஒருவரை உருவாக்கி அவரை முழுமையாக வெளிப்படுத்த,அடையாளப்படுத்தும் மொழியே தாய்மொழி.

மொழியியல் புலமையின் தந்தை என போற்றப்படும் டாக்டர் எமினே தமிழ்மொழியின் கட்டமைப்பு குறித்து கூறுகையில் உலகத்து மொழிகலிலேயே அதிக வேற்சொற்களையுடைய மொழி தமிழ் என்று கூறுகிறார்.

மொழித்தூய்மை நடந்த மொழிகளில் சில எடுத்துக்காட்டுகள்

துருக்கு மொழியில் - அரபும்,பாரசீகமும்

ருசிய மொழியில் - பிரெஞ்ச்

பிரஞ்ச் மொழியில் - இலத்தீனும் பிறமொழிகளும்
இவைகளெல்லாம் களையெடுக்கப்பட்டு மொழித்தூய்மை செய்யப்பட்டன.

மலையாளத்தில் குஞ்சன நம்பியார் தலைமையில் கி.பி 18 ஆம் நூற்றாண்டில் மொழித்தூய்மை மேற்கொள்ளப்பட்டது.சமஸ்கிருதம் கலக்காதது பச்சை மலையாளம் எனப்பட்டது.

கன்னடத்தில் கி.பி 9 ம் நூற்றாண்டில் நிருதுங்க வர்மன் எனும் மன்னனால் தனிக்கன்னடம் எழுப்பப்பட்டது.தனிகன்ன்டம் அல்லது அச்சகன்ன்டம் என்று அது அழைக்கப்பட்டது.

தெலுங்கில் 18ம் நூற்றாண்டில் தூய தெலுங்கு இயக்கமே நடந்த்தது, அது அச்ச தெலுங்கு என்பபட்டது.தனி தெலுங்குகான நிகண்டே வெளியிடப்பட்டது.

மும்பை தமிழராய்.இலங்கைத் தமிழராய்,மலேசிய தமிழராய்.சிங்கப்பூர் தமிழராய்.மொரீசியஸ் தமிழராய்.வெங்காளூருத் தமிழராய்.பிஜி தீவு தமிழராய்.ஆப்பிரிக்க தமிழராய் இப்படை மொழி மறந்து வெற்று தமிழராய்.உலகெல்லாம் ஈனத்தனமாய் நடத்தப்படும் ஏதிலி தமிழராய்.ஏன் இன்று தாய்தமிழகத்திலேயே அடிமை தமிழராய் நடத்தப்படுகிறோம்.எல்லாம் மொழி மறந்த்ததால் வந்த விளைவு.தமிழ் மொழி உணர்வுள்ள தமிழராய் என்று மாறுகிறோமோ அன்றுதான் தமிழர்க்கு விடுதலை

No comments: