Saturday, January 5, 2008

தமிழர்களாக வாழ்வது குற்றம் என்றால் துணிவுடன் அதை தொடர்ந்து செய்வோம்

தமிழர்களாக வாழ்வது குற்றம் என்றால் துணிவுடன் அதை தொடர்ந்து செய்வோம்

நமக்கு மிக அருகாமையிலே மாபெரும் மனித படுகொலை நடந்துகொண்டிருக்கிறது.கொல்லப்படுபவர்கள் நமது சகோதர தேசிய இனமான ஈழத்தமிழ் மக்கள் .அமெரிக்கா.இந்தியா,பாகிஸ்தான்,சீனா என உலகப்பயங்கரவாதிகளோடு கூட்டு சேர்ந்து கொண்டு சிங்கள வெறிப்படை ஈழத் தமிழர்களை கொன்றொழிக்கிறது.

ஈழத்தமிழ் சமூகத்தை அழிவிலிருந்து காப்பதற்கு உயிரை கொடுத்து போராடுகின்றனர் விடுதலைப்புலிகள்.

நாம் ஈழ சகோதரர்களுக்காகப் போராடவில்லை,அவர்களின் துன்பத்தை கண்டு இரக்கப்படுகிறோம்.அவர்களின் மரணத்துக்காக அழுகிறோம்.அழுவதற்கு கூட அடிமைகளுக்கு உரிமை இல்லை என்று உத்தரவு போடுகின்றன இந்திய - தமிழக அரசுகள்.

ஆனால் சிங்கள வெறிப்படைக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கிகொண்டும்,எப்படியெல்லாம் சித்திரவதை செய்து ஈழத்தமிழரை கொலை செய்யலாம் என்றும் என்னவெல்லாம் கொடுமைகள் செய்து ஈழத்தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தலாம் என்றும் சிங்கள வெறியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கிறது இந்திய அரசு.

இதை தட்டி கேட்க வக்கில்லாமல் கூட்டணி அமைத்து கொட்டமடிக்கிறது தமிழக அரசு.

இனியும் நாம் இந்தியனாக இருக்க வேண்டுமா ?

தன்மான போராளி தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணை காவிகூடாரமாக மாற்றியே தீருவோம் என்று இந்து மதவெறி பயங்கரவாதிகள் தமிழ்நாட்டை தாக்க தொடங்கியுள்ளனர்.கையெடுத்து கும்பிடவோ,மனமுருகி வேண்டி ஏமாறவோ கூட லாயக்கற்று கடலுக்குள் இருக்கும் மணற்திட்டை இராமன் பாலமென கூறி மக்களை மடையர்களாக்குகின்றனர்.இதை காரணம் காட்டி கருநாடக எல்லையில் இரண்டு தமிழர்களை உயிரோடு எரித்து கொலை செய்தனர்.தமிழக முதல்வரின் தலைக்கு விலை வைத்தனர்.தமிழ்நாட்டை இன்னொரு குஜராத்தாக மாற்றத் துடிக்கின்றனர்.

இதனை கண்டிக்கவோ,காரணமானவர்களை தண்டிக்கவோ நீதிதுறை.காவல் துறை போன்ற எந்த துறைக்கும் திராணியில்லை.

ஆனால் நாங்கள் இந்துவுமில்லை இந்தியனுமில்லை - நாங்கள் தமிழர்கள் என தமிழ்நாடு போர்குரல் உயர்த்தியவுடன் பார்ப்பன உச்சிகுடிமிகளின் நீதிமன்றம் கோபத்தில் தாண்டவமாடியது.தமிழர்கள் தன்மானம் பகுத்தறிவு பேசுவது குற்றம்: பார்ப்பன கட்டுகதைகளை நம்ப வேண்டும்.இந்துவாகவும் இந்தியனாகவும் இருப்பதற்கு முட்டாளாக இருக்க வேண்டும் என உத்தரவு போட்டது.

ஈராயிரம் ஆண்டுகலுக்கும் மேலாக நம்மை ஒடுக்கி சுரண்டி கொழுத்து வரும் பார்ப்பனியத்தின் அதிகார குடுமியை அறுத்தெறிய வேண்டாமா?

இனியும் நாம் இந்துவாகவும் இந்தியனாகவும் இருக்க வேண்டுமா?

சட்டமன்றம்.பாராளுமன்றம்,நீதிமன்றம்,நடுவர் மன்றம் என எந்த மன்றத்துக்கு போனாலும் காவிரியில் கடுகளவு நீரும் தரமாட்டோம் என அடாவடி செய்கிறது கருநாடக அரசு.

கடலிலே கொட்டினாலும் தமிழர்களின் தவித்த வாய்க்கு துளி நீரையும் தராமல் முல்லை பெரியாறையும்.பவானியையும் முடக்கியே தீருவோம் என வஞ்சகம் செய்கிறது கேரள அரசு.

தட்டி கேட்க நாதியில்லாத தமிழர்களுக்கு நாங்கள் மட்டும் தண்ணீர் தர முடியுமா என் பாலாறை தடுத்து நிறுத்துகிறது ஆந்திர அரசு.

எந்த சிக்கலையும் தீர்க்கவிடாமல் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது இந்திய அரசு,கையாலாகாத்தனத்தோடு பல்லை இளிக்கிறது தமிழக அரசு.

இனியும் நாம் இந்தியனாக இருக்க வேண்டுமா?

இதுவரை நாம் இழந்த்தது போதாதா?

கச்சத்தீவை இலங்கையிடம் இழந்தோம்

பச்சை தமிழனின் பச்சை துரோகத்தால் பீர்மேடு,தேவிகுளம் பகுதிகளை இழந்தோம்.

தங்கவயல் வெங்காலூரை கருநாடகத்திடம் இழந்தோம்.

வளமிக்க நமது காடுகளை எல்லாம் தேயிலை தோட்ட கொள்ளையர்களிடம் இழந்தோம்.

விலைமதிக்க முடியாத மலைகலை எல்லாம் சிமென்ட் மற்றும் கிராணட் கொள்ளையர்களிடம் இழந்தோம்.

இன்று செல்வம் கொழிக்கும் கடல் வளங்களையும்.மீன்பிடிதொழிலையும் பணக்கார கடல்கொள்ளையர்களிடம் இழந்துகொண்டிருக்கிறோம்.நரிமணம் பெட்ரோலையும் நெய்வேலி நிலகரியையும் அதிலிருந்து பெறப்படும் மின்சாரத்தையும் இழந்துகொண்டிருக்கிறோம்.

உயிர் வாழ்வதற்கு ஒரே ஆதாரமான விளைநிலங்களையும் பணமுதலைகளின் சிறப்பு பொருளாதார மண்டலங்கலுக்காக இழந்து கொண்டிருக்கிறோம்.

நம் மண்ணையும் வாழ்வையும் பறித்துகொலுக்கும் இந்திய அரசு நமது தன்மானத்திற்கு சவால் விடுகிறது.மொழி இன உரிமைகளை பேசுவது இந்திய ஒற்றுமைக்கு எதிரானது என்று இல்லாத ஒன்றை காட்டி மிரட்டுகிறது.உயிர் வாழும் உரிமைக்காக போராடும் நமது ஈழச் சகோதரர்களை பயங்கரவாதிகள் என கொச்சப்படுத்துகிறது.ஈழ தமிழர்களுக்கு உத வேண்டிய நமது கடமையை பயங்கரவாதம் என கூறி கடுமையாக நசுக்குகிறது.

இந்த ஈனசெயல்கலுக்கெல்லாம் இந்திய அரசின் எடுபிடியான தமிழக அரசு துணை போகிறது.

இனியேனும் விழிப்போம்.இழந்தத்தை மீட்ப்போம்.இருப்பதை காப்போம்.

நொடிகளின் இடைவெளியில் வாழ்ந்தாலும் மின்னலாய் மின்னுவதன்றி அடிமை சாசனத்துக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டோம் என முழங்குவோம்

ஈழ விடுதலையை ஆதரிப்போம்

சிங்கள வெறி படைக்கு துணை போகும் இந்திய அரசை எதிர்ப்போம்

இராமன் பாலம் மற்றும் இதிகாச குப்பைகளை எரிப்போம்

பார்ப்பன குடுமிகளின் உச்ச நீதிமன்றத்தை ஒழிப்போம்

காவிரி,முல்லை பெரியாறு,பவானி.பாலாறு உரிமைகலுக்காக உயிரையும் கொடுப்போம்.

தமிழர் வாழ்வுக்கு தடையாக இருக்கும் இந்திய சிறையை தகர்ப்போம்

தன்மான புரட்சி தமிழ் தேசம் படைப்போம்

1 comment:

மோதிப்பார் said...

முதலில் தேசியம் என்பதும் தேசம் என்பது ஒற்றைக் கருத்துருவம் அல்ல. அது இன்றைய இந்துதத்துவா சொல்லம் பண்பாட்டுதேசியம் வரை பல வடிவங்களில் கோட்பாடுகளில் வளாந்து வந்தள்ளது. கட்டுரை அருமை.பூனூலால் கட்டமைக்க பட்ட ஒரு தேசமே இது