Saturday, January 12, 2008

சிறப்பு பொருளாதார மண்டலங்கள்

தமிழக மக்களே எச்சரிக்கை

பாழும் வயிற்றுப் பாட்டுக்காக
வாழும் நிலத்தை பறிகொடுப்பதா

பெற்ற் தாயை விட்டு பிழைப்பவர் போல
பிறந்த மண்ணை விற்றுப் பிழைப்பதா

மண்ணையும் மானத்தையும் இழந்து விட்டு
நடுத்தெருவில் நாய்கள் போல திரிவதா

பண முதலைகலுக்காக மக்களை பலிகொடுக்கும்
மானங்கெட்ட அரசுகளை விட்டு வைப்பதா

என நெல்லை தூத்துக்குடி மக்கள் உயிர் வாழும் உரிமைக்கான போராட்டத்தில் குதித்துள்ளனர்

40000 குடும்பங்கலை விரடியடித்துவிட்டு அவர்களின் 12000 ஏக்கர் நிலப்பரப்பை பிடுங்கி மேற்கு வங்க மக்களை கொன்று குவித்த டாடாவுக்கு தாரைவார்க்க துடிக்கிறது துரோகி கருணானிதியின் தமிழக அரசு

இப்பகுதி எங்கும் பரவி கிடக்கும் டைட்டானியம் டை-ஆக்ஸைடு என்ற மதிப்பு மிக்க இயற்க்கை கனிம வளத்தை கொள்ளையடிக்கவே இக் கொலைகார கூட்டணி அலைபாய்ந்துகொண்டிருக்கிறது நெல்லை தூத்துக்குடியில் மட்டுமல்ல தமிழ்நாடு எங்கும் இயற்க்கை செல்வங்கள் கொட்டிக் கிடக்கிறது.

நெய்வேலியில் நிலக்கரி நரிமணத்தில் பெட்ரோல் தஞ்சை முதல் பாண்டிச்சேரி வரையிலான கற்கறையை ஒட்டிய பகுதிகலில் புதைந்து கிடக்கும் எண்ணற எண்ணெய் கிண்னற்கள்.வட தமிழகமெங்கும் விறவிக் கிடக்கும் கிரானைட் கல் பாறைகள்.தேயிலை தோட்டங்கலுக்காக அழிக்கப்பட்டதையும் தாண்டி செழித்துக் கிடக்கும் காடுகள்,சந்தனம் மற்றும் விலை உயர்ந்த மரங்கள்.அரிய மூலிகை செடிகள் .வளமான விளை நிலங்கள்.ஆறுகள் மற்றும் நீராதாரங்கள்.வசதியும் வாய்ப்பும் நிறைந்த துறைமுகங்கள் மீன் மற்றும் கடல் வளங்கள்.தூத்துக்குடி முத்து பல நிறத்தில் மின்னி விலை போகும் குமரி கடல் மணல்.பலவகை கணிம தாதுக்கலை கொண்டு மலைகலாஇ உயர்ந்து கிடக்கும் குமரி மாவட்ட மணவாலக் குறிசியின் மணல் குவியல்கல் என எங்கும் எத்திசையும் தமிழ்நாடு முழுவதும் இயற்க்கை செல்வங்கள் இறைந்து கிடக்கின்றன.

எல்லாமே அள்ள அள்ள குறையாத அமுத சுரபிகள்.வெட்ட வெட்ட கொட்டிக்கொண்டேயிருக்க்கும் செல்வ சுனைகள்.இவைகலை ஒன்று விடாமல் விழுங்குவதற்க்காகத்தான் பணக்கார நாய்கள் அரசோடு பல தொழில் ஒப்பந்தங்களை போடுகின்றன

டைட்டானியத்துக்காக 12000 ஏக்கரை பட்டாப் போட டாட்டா துடிப்பது போல அடுத்தடுத்து தமிழ்நாடு முழுவதையும் பல பண முதலைகல் பங்கு போட்டுக்கொல்லும்,கார் தொழ்ற்சாலை க்லர் ஃபிலிம் தொழிற்சாலை.செல்போன் தொழிற்சாலை மென் பொருள் பூங்கா ,மருந்து ரசாயன தொழிற்சாலை.பெப்சி கோக் என எண்ணற்ற சிறப்பு பொருளாதார மண்டலங்கலை அமைக்கவும் உணவு மற்றும் காய்கறிக்கான விவசாய சிறப்பு மண்டலங்களமைக்கவும் பணவெறியர்கலுக்கு மொத்த தமிழகமும் தேவை

பல்லாயிரக்கனக்கான நிலப்பரப்பில் தொழில் தொடங்கி சில நூறு பேர்கலுக்கு வேலை தருவார்களாம் .முழுக்க முழுக்க எந்திரமயமாக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப உற்ப்பத்தியில் பள்ளிக்கூடத்தையே தாண்டாத கோவன ஆண்டிகளான நமக்கென்ன வேலை கிடைக்கும்? ஐ ஐ டி, ஐ ஐ எம் போன்ற உயர் தொழில்நுட்ப படிப்புகலை தங்கலுக்கு மட்டுமே உடையது என பட்டாப் போட்டுக்கொண்ட பணக்கார நாய்கள் பார்ப்பனர்கள் உயர் சாதியினர் இவ்வேலைகலை கைப்பற்றிக்கொண்டு பணமுதலைகலுக்கு சேவை செய்து சொகுசு கார்கலில் பவனி வருவார்கள்.

இருப்பதை இழந்துவிட்டு நாம் எங்கு போவது, இதோ பிழைப்பு தேடி கூலிகலாக போன பீகார் மக்களை சுட்டுக்கொல்கிறார்களே அசாமில் அதை போல நாமும் நாடோடிகளாக்கப்பட்டு பிற இனத்தவரிடம் குட்டுப்பட்டு சூடுபட்டு சாக வேண்டியத்துதான்.இப்போதே கருனாடகாவிலும் மராட்டியத்திலும் தமிழர்கள் அடிவாங்கி உதைவாங்கி அனாதைகளாக செத்துக்கொண்டிருக்கிறார்கள் இதை உணர்ந்துதான் நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்கள் தலைமுறை தலைமுறையாக தங்களை தாலாட்டி சீராட்டி வளர்த்த தாய் மண்னை எந்த நாயும் தொடுவதற்க்கு விடமாட்டோம் என பொங்கியெழுந்து போராடுகின்றனர்.

ஆனால் அரசும் ஆளும் வர்க்கங்கலும் ஓட்டுப் பொறுக்கி கட்சிகலும் நிலக் கொள்ளையை தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு உருவாக்கம் முன்னேற்றம் எனக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிகின்றனர்.டாட்டா பிர்லா அம்பானிகலின் பங்காளியாக பெருத்துவிட்ட கருணாநிதி தமிழ்நாட்டை துண்டு போட்டு விற்பதுதான் முன்னேற்றத்துக்கான பாதை என்றும் இதற்கெதிராக போராடினால் எனது அனுகுமுறை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என மிரட்டுகிறார்.

குறுகிய கால அரசியல் கொள்ளை மூலமே எண்ணற்ற எஸ்டேட்டுகல் பழத்தோட்டங்கள், பங்களாகள், நட்ச்சதிர உணவகங்கள் என மக்களின் சொத்துக்கலை அபகரித்த செயலலிதா டாட்டாவின் நிலக் கொள்ளையை எதிர்ப்பதாக நாடகமாடுகிறார்,

மகன்.மருமகள் என அடுத்தடுத்து குடும்பத்தயே கட்சி பதவிகலில் அமர்த்தி குறுநில மன்னர் போல் ஆட்டமாடும் ராமதாசு மக்களிடம் நிலங்கலை கொடுக்க கூடாது என்றும்,அரசிடம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் ஆலை தொடங்க ஆலோசனைகலை கூறியும் குழப்பி மீன் பிடிக்க நினைக்கிறார்.

மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மக்களை படுகொலை செய்து டாட்டாவுக்கு அடியாள் படையாக செயல்படும் சி.பி.எம். கட்சி இங்கு மவுனமாக இருந்து கொண்டு எஜமானனை பாதுகாத்து மக்களுக்கு துரோகம் செய்கிறது.

தன்மானம் மிக்க தமிழ் மக்களே

தனியார்மயம்.தாராளமயம்.உலகமயம்,என்னும் அழிவு பாதை மூலம் பண முதலைகல் மக்களின் உழைப்பால் விளைந்த பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் விழுங்கி விட்டன.லாப வெறி பேயாய் பிடித்து மக்களின் நிலங்கலையும்.இயற்க்கை வளங்களையும் சூறையாட தொடங்கி விட்டன.கொள்ளையர்களின் பிடியில் மண்ணை இழந்தால் என்னவாகும்?

திருப்பூரின் பனியன் தொழில் முதலாளிகலை பாருங்கள்.விவசாயிகலாக இருந்து பனியன் தொழிலில் அடி எடுத்து வைத்தவர்கள் லாப வெறி பிடித்து கோவை-ஈரோடு மாவட்டங்கலின் நிலம் அணைத்தையும் நஞ்சாக மாற்றியதோடு புகழ் பெற்ற நொய்யல் ஆற்றையும் அழித்துவிட்டனர்.தங்களதுசொந்த ரத்தங்கலான விவசாயிகளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று விடுகின்றனர்,இன்மண்ணில் பிறந்தவர்கலின் பேராசையால் இத்துணை பெருங்கேடுகள் விளைந்தபோது அந்நியர்கள் என்ன செய்வார்கள் எண்ணிப்பாருங்கள் ஆகவே டாட்டாவின் நிலக்கொள்ளைக்கு எதிராக போராடுவது நெல்லை தூத்துக்குடிக்கு மட்டுமேயான பிரச்சனையல்ல,விமான நிலைய விரிவாக்கம்.சாலை விரிவாக்கம்,உள் கட்டுமான சீரமைப்பு.சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என தமிழ் நாட்டையே சூறையாடும் மொத்த தமிழ்தேசிய பிரச்சனை.

எனவே கண் முணே நமது வாழ்க்கை களவாடப்படுவதை கண்டு

பொங்கி எழட்டும் தமிழ்த்தேசம்

இந்திய சிறையை நடுநடுங்கச் செய்யட்டும் நமது போராட்டம்

தமிழக மக்களே மேற்கு வங்க மக்களை கொன்று குவித்த டாட்டாவோடு கருணாநிதி கூட்டுநிலக் கொள்ளையர்கலின் பிடியில் தமிழ்நாடுதாய் மண்ணை காக்க சூழுரைப்போம்தமிழ் தேச விடுதலையை முன்னெடுப்போம்

No comments: