இந்தியா ஒரு பல்தேசிய அரசு சமூகம்
அரசு சமூகம் என்பது தேசிய சமூகத்திலிருந்து வேறுபட்டதாகும்.தேசிய சமூகத்தில் மக்கள் ஒரு பொதுமொழியை கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அரசு சமூகத்தில் அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமிலை.இங்கு பொது மொழி என்று குறிப்பிடப்படுவது மக்கள் பேசும் மொழியேயன்றி அரசு நிர்வாகத்தில் இருக்கும் மொழி அல்ல.
இந்தியா ஒரு தேசிய சமூகமல்ல என்பதில் விவாதத்துக்கு இடமில்லை.இங்கு பல்வேறு மொழிகளை பேசுகின்ற தேசிய இனங்கள் இருக்கின்றன.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவான தேசிய இனம்,மத்திய காலத்திலும் அதன் பின்னரும் உருவான தேசிய இனங்கள்.சமீபத்தில் தேசிய இனங்களாக உருவாகிய உருவாகி வருகிற மக்கள் சமூகங்கள் என பற்பல உள்ளன.
உதாரணமாக தமிழ்த் தேசிய இனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவான மிக பழமையான தேசிய இனம்.தெலுங்கு கன்னடம்,மராத்தி,குஜராத்தி.ஒரியா வங்காளி,மலையாளம்.பஞ்சாபி,அசாமி.காஸ்மீரி போன்றவை மத்திய காலத்திலும் அதன் பின்னரும் உருவான தேசிய இனங்கள்.எவ்வாறாயினும் இவை எல்லாம் வளமான வளர்ச்சியடைந்த மொழியையும் இலக்கியங்களையும் கொண்டுள்ள தேசிய இனங்களாகும்.
இவை எல்லாம் மைய அரசின் கீழான மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருப்பினும் மைய அரசு இவற்றின் தேசிய தகுதியை அங்கீகரிக்கவில்லை.இவற்றின் மொழிகள் பிரதேச மொழிகள் என்றே குறிப்பிடப்படுகின்றன.இவற்றின் பிரதேச எல்லைகளை மைய அரசு அம்மக்களின் சம்மதம் இன்றியே மாற்றி அமைக்கும் அதிகாரம் பெற்றுள்ளது,
இவை தவிர வட இந்தியாவில் இருக்கும் உத்திரபிரதேசம்,மத்தியபிரதேசம்.ராஜஸ்தான்.பீகார் போன்ற மாநிலங்கள் மொழி வழியில் அமைக்கப்பட்ட மாநிலங்கள் அல்ல.
அதே போல வடகிழக்கு இந்திய பிரதேசங்கலும் மொழிவழி நிர்வாக அமைப்புகளாக பிரிக்கபட்டவை அல்ல.இவற்றில் எண்ணற்ற தேசிய இனங்களும் தேசிய இனங்களாக உருவாகி வரும் மக்கள் சமூகங்கலும் உள்ளன. அவற்றில் பல வளர்ச்சியடைந்த மொழியையும் இலக்கியங்களையும் கொண்டுள்ள தேசிய இனங்களாகும்.எனினும் அவற்றை மொழிவழி மாநிலங்களாககூட மைய அரசு அனுமதிக்கவில்லை.
மிகக்கடுமையான மக்கள் போராட்டங்கலுக்கு பிறகு மணிபுரி,திரிபுரா.மேகாலயா,நாகலாந்து.மிஜோ. போன்ற மாநிலங்கள் அமைக்கபட்டுள்ளதுடன்.மணிபுரி.நேபாளி,கொங்கணி மொழிகளுக்கு பிரதேச மொழித் தகுதி அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ளது.மணிபுரி மக்கள் தொகை 8 லட்சம்.நாகலாந்து மக்கள் தொகை 8 லட்சம்.மிஜோரம் 5 லட்சம்.கொங்கணிகள் 15 லட்சம்.நேபாளிகள் 14 லட்சம்.இவற்றில் மணிபுரியும் நேபாளியும் வளர்ச்சிய்டைந்த மொழிகள்.நாகலாந்தில் தற்போதுதான் பொதுமொழி ஒன்று (நாக்மிஸ்) உருவாகி வருகிறது.எனினும் இவர்களுடைய கடுமையான போராட்டங்களினால் தனிமாநிலங்களாக அங்கீகரிக்கபட்டிருக்கிறார்கள்,இவற்றை விட பன்மடங்கு மக்கள் தொகையை கொண்ட வளர்ச்சியடைந்த மொழியையும் இலக்கியங்களையும் கொண்டுள்ள பற்பல மக்கள் சமூகங்கள் வட iந்தியாவில் மாநில தகுதிகூட மறுகபட்டுள்ள நிலையில் உள்ளன.
உத்திரபிரதேசத்தில் மைதிலி கடிபோலி மொழிகள் பேசும் மக்கள் தனிதனி மாநிலங்களாக அமையும் தகுதி படைத்தவர்கள்.போஜ்புரி,மைதிலி,மகதி மொழி பேசும் மக்கள் 160 லட்சம் பேர் பீகாரில் உள்ளனர்.மேலும் பிலி மொழி பேசுவோர் 53 லட்சம்.முண்டாரி மொழி பேசுவோர் 12 லட்சம்,கோண்டி மொழி பேசுவோர் 52 லட்சம்,குருக் மொழி பேசும் ஓராக்கள் 17 லட்சம்,காரிபோலி பேசும் மக்கள் 16 லட்சம்,போடோக்கள் 6 லட்சம், தோக்கிரிகள் 13 லட்சம் கோர்காலியர்கள் 14 லட்சம், துளுவர்கள் 11 லட்சம், சந்தால் மொழி பேசுவோர் 2 கோடி என் எண்ணற்ற தனிதனியான மொழியையும் பண்பாட்டையும் கொண்டுள்ள மக்கள் சமூகஙகள் வடமாநிலங்களில் உள்ளன.
வடமாநிலங்களில் குறைந்தபட்சம் இரண்டுடஜன் மொழிகள் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கபட வேண்டுமென்று ராகுல் சாங்கிருத்தியாயன் கோரினார் என்பது அங்குள்ள தேசிய இனங்களின் எண்ணிக்கையை புரிந்துகொள்ள உதவுவதாகும்,ஆனால் நாகா,மிஜோ,மணிபுரிகளை விட அதிகமான மக்கள் தொகை கொண்ட மிக பல மக்கள் சமூகங்கள் தேசிய இனங்களாக அங்கீகரிக்கபடவில்லை என்பதோடு அவற்றுக்கு மாநில நிர்வாக தகுதிகூட வழங்கபடவில்லை,எனினும் தங்கள் மொழிகலுக்கு அரசியல் சட்ட தகுதி கோருவது,மாநில நிர்வாக தகுதி கோருவது என்ற வெவ்வேறு வடிவில் வெவ்வேறு அளவில் இந்த மக்கள் சமூகங்களில் கோரிக்கைகலும் போராட்டங்களும் தற்போது எழுந்துகொண்டிருக்கின்றன.
இவ்வாறு இந்தியா பழமையான வளர்ச்சிய்டைந்த பல்வேறு தேசிய இனங்களையும் சமீபத்தில் தேசிய இனங்களாக வள்ர்ச்சியடைந்த வளர்சியடைந்து வருகிற எண்ணற்ற மக்கள் சமூக்ங்களையும் கொண்ட ஒரு பல்தேசிய அரசு சமூகமாக இருக்கிறதேயன்றி தேசிய சமூகமாக இல்லை.
இவ்வாறு வேறுபட்ட வளர்சி மட்டங்களுடனும் வரலாறுடனும்,கலை, இலக்கிய,பண்பாட்டுடனும் திகழும் தேசிய இனங்கள் அணைத்தும் முழுமையான நவீன தேசங்களாக வளரும் கட்டத்தில் வரலாற்று போக்கில் இருக்க்கின்றன,இந்த நிகழ்சிபோக்கின் வரலாற்று கட்டத்தின் நிறைவின் ஊடாகவே இந்தியாவில் சனனாயக புரட்சி வெற்றியடைய முடியும்
நன்றி தோழர் கே.எம்.
Friday, January 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment